"இயக்குநர்" வ.கௌதமன் , "அனைத்து மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு " மற்றும் "தமிழர் உரிமைக்கான மாணவர்கள்- இளைஞர்கள் கூட்டமைப்பு " இணைந்து முன்னெடுக்கும் நீட் தேர்வு விலக்குக்கான தமிழகத்தைச் சார்ந்த அனைத்துக்கட்சி மக்களவை (39) - மாநிலங்களவை (18) உறுப்பினர்களை (MP) சந்திக்கும் "தமிழர் உரிமை மீட்புப்பயணம்" விரைவில் முன்னெடுக்கப்பட இருக்கிறது. தமிழகத்தைச் சார்ந்த 57 பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி அலுவலகம் அல்லது அவர்களது இல்லத்தில் அறவழியில் "கோரிக்கை மனு" அளிக்கப்பட உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இருமுறை நிறைவேற்றப்பட்ட "நீட் தேர்வு விலக்கு" சம்பந்தமான தீர்மானத்திற்கு விரைவாக குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறவும், அதற்கான முக்கிய செயல்பாடாக பிரதமர் அவர்களை சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும், அதிலும் தவறும்பட்சத்தில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கிடைக்கும் வரையில், பாராளுமன்ற இரு அவைகளையும் முடக்கும் வகையில் செயலாற்றவும் வலியுறுத்தப்படும். மேற்கண்ட தமிழர் உரிமை மீட்புப்பயணத்தில் பங்கெடுக்க விரும்பும் தமிழகம் முழுவதும் உள்ள "மாணவர்கள்- இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்" இத்துடன் இணைக்கப்பட்டுள்ள " www.pudhiyakkaatru.com" இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இப்பயணத்தில் தங்களது மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிப்பதற்கு அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்!
நம்மால் முடியும்!
நம்மால் மட்டுமே முடியும்!
எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்!
எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்!
மேலும் தெரிந்துக்கொள்ள...